Skip to main content

கரோனா சிகிக்சை முடிந்து பணிக்கு திரும்பிய ஆயுதப்படை போலீசார்... காவல் ஆணையர் வாழ்த்து 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 


தமிழகத்தில் கரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ள அனைவரும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையங்களிலேயே பணிகளை தொடங்கி உள்ளனர்.


இந்தநிலையில் ஆயுதப்படை போலீசார் 60 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணியை தொடங்க உள்ளனர். இதனையொட்டி சென்னை எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 60 போலீசாரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். 

காவல்துறையின் கரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரை கண்காணிக்க காவல் துறையில் சிறப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது! 

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Postal voting for police officers has begun

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தபால் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று (11.04.2024) முதல் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு மையங்களில் தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.