Skip to main content

துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நடிகையின் உடல் பாகம்..! இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறுதி சடங்கு..!

Published on 06/04/2019 | Edited on 07/04/2019

கடந்த ஜனவரி இருபத்தி ஒன்றாம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அரிசி பையில் இளம் பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையமான பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் இளம்பெண்ணின் பாகங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்..!  எந்த ஒரு துப்பு கிடைக்காமல் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு கிடைத்த ஒன்று அந்தக் குப்பை சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டலம் ஆன கோடம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் குப்பை கிடங்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பை என்பது தெரியவந்தது. 

 

murder

 

அதன்பேரில் அப்பகுதியில் ஏதேனும் இளம் பெண்கள் காணாமல் போன புகார்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளதா என்று விசாரணையை தொடங்கினர். ஆனால் சென்னை மாநகர காவல் எல்லையில் வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த உடல் பாகத்தின் பெண்ணின் வயது சுமார் 35 இருக்கும் என்ற நிலையில் அதுபோன்ற எந்த ஒரு பெண்ணும் சமீபத்தில் காணாமல் போனதாக புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. போலீசாரின் விசாரணையில் அடுத்த கட்டமாக அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்களில் குத்தப்பட்டிருந்த சிவன் பார்வதி மற்றும் டிராகன் டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர் மேலும் உடல் பாகங்கள் கிடைத்த அரிசிப் பையை வைத்து விசாரணை நடத்தினர். அதிலும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு சுணக்கம் அடைந்த நிலையில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஆந்திர மாநிலம் அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

murder

 

இந்த நிலையில் தூத்துக்குடி போலீசார் கொடுத்த தகவலின்பேரில் நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த ஞாழா என்ற கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண் என்ற தகவலை தூத்துக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு தகவல் அளித்தவர் சந்தியாவுடன் சில காலத்திற்கு முன் நெருக்கமானவர்கள் என்பதும் அவர் கையில் குத்தப்பட்டிருந்த பச்சை வைத்து அவராக இருக்கலாம் என்ற தகவலை அவர்கள் கொடுத்தனர். உடனே ஆய்வாளர் பிரபாகரன் தெற்கு காவல் ஆய்வாளர் சம்பத்திற்கு தகவல் கொடுத்தார். ஆய்வாளர் சம்பத் சென்னை பள்ளிக்கரணை ஆய்வாளர் ஆல்பின் ராஜ்க்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு விசாரணையை துவங்கிய போலீசார் கொலை செய்யப்பட்ட சந்தியா என்பதை உறவினர் மூலம் உறுதிப்படுத்தினர்.

 

murder

 

இந்த கொலையை செய்தது காதல் கணவர் பாலகிருஷ்ணன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் மேலும் சந்தியாவுக்கு பல தொடர்புகள் இருந்தது அதை விடும்படி பலமுறை கூறியும் அவர் அதை மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்து பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் போடப்பட்டதாக சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் வெட்டப்பட்ட பாகங்களில் வழக்குக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் தலை இதுவரை கிடைக்காத நிலையில் சந்தியாவின் உடல் பாகங்களை 2மாதம் கழிந்து தற்போது இறுதி சடங்குக்காக உறவினர்களிடம் நாளை ஒப்படைக்க உள்ளது. அதன்படி நாளை மாலை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.