தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறித்தியுள்ளோம் என அதிமுக தலைமை பிராமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளின் போது பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்.
பேனர் வைக்க மாட்டோம் என திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில், அதிமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து, லாரி மோதி சுபஸ்ரீ இறந்ததால், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.