Skip to main content

சென்னையில் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் ! (படங்கள்)

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

 

''இரு நூறு கிலோமீட்டர் தூரம் என்றால்கூட நடந்தே போயிருப்போம்.ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை நாங்கள் எப்படி கடந்துபோவது?'' என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார், ஓரிசாவைச் சேர்ந்த இளம் தொழிலாளி ஹம்ரித்.

 

h

 



''திடீர்னு அறிவிச்சதால எங்களால போக முடியல. அப்படியும் இருபது அல்லது முப்பது பேரு கிளம்பிட்டாங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.கஷ்டம்தான். எப்படி போகும்ன்னு தெரியல.ஒன்னு வேலை நடக்கனும்.இல்லை ட்ரெயின் போகனும்.அதுவரைக்கும் இப்படிச் சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்குவதுதான்'' எனத் தட்டுத்தடுமாறி தெரிந்த தமிழில் உரையாடுகிறார் ஹம்ரித். 


சென்னையின் கிழக்கு தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்காகப் புலம்பெயர்ந்து வந்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுள் ஒருவர்தான் ஹம்ரித்.இவருடன் மேற்குவங்கம், ஓரிசா, பீகார், ஜார்கண்ட் என வட மாநிலத் தொழிலாளர்கள் அறுபதுபேர் வரை தங்கியுள்ளனர். 

 

l




அறுநூறு ரூபாய் சம்பளத்திற்குத் தினம் பத்துமணி நேரத்திற்கும் மேலாக கடும் உழைப்பைச் செலுத்தக்கூடிய தொழிலாளர்கள் இவர்கள். தற்பொழுது தங்கியிருக்கும் அறுபது தொழிலாளர்களுள் பெரும்பாலோனோர் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.

 

l



பத்துக்குப் பத்து அளவில் சவுக்கு கம்புகளை நிறுவி, மேல்புறம் மட்டுமல்ல நாலாபுறமும் இரும்புத்தகட்டைக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கும் தற்காலிக அறைக்குள்தான் அனைவரும் முடங்கிக் கிடக்கிறார்கள். காற்றோட்டம் கடுகளவும் கிடையாது. மேலே தொங்கியபடிச் சுழலும் மின்விசிறி வெப்பக்காற்றை வாரி அறையெங்கும் வீசுகிறது.கரடுமுரடான கட்டாந்தரையில் படுத்துக்கிடக்கின்றனர் அத்தொழிலாளர்கள். 
 

 




இரும்புத்தகட்டால் வேயப்பட்ட குடியிருப்புக்குள் கொளுத்தும் வெயிலில் இருக்க முடியாமல் சாலையோர மர நிழல்களின் கீழாய் ஆளுக்கொரு திசையாய் சிதறிக்கிடக்கின்றனர். சிலர் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதனருகே தொழிலாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகத் தங்களுக்குத் தாங்களாகவே முடிதிருத்திக் கொண்டிருந்தனர். வாட்சப், கைப்பேசி வழியே கொரோனா குறித்த செய்திகளைப் பார்த்ததாகத் தெரிவித்தாலும், முகக் கவசங்களோ, போதுமான இடைவெளியோ ஏதுமின்றி இயல்பாய் எப்போதும் போலவே அவரவர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். ஏப்ரல் 14-ந் தேதியுடன் நிலைமை சீராகும் என்றே நம்பிக்கொண்டிருக்கின்றனர். மே மாதம்வரை ஊரடங்கு நீட்டிக்கும் வாய்ப்பிருக்கிறது என்றபோது, அதிர்ந்துதான் போனார்கள்.
 

l




''வீட்டுக்கு அமவுண்ட் அனுப்பணும். மேஸ்திரி இன்னும் கொடுக்கல. லீவு நாளுக்குச் சம்பளம் போடுறதா சொல்றாங்க. எப்படித் தெரியல. மே மாசம் வரை இப்படியே எப்படி இருக்கிறது? திடீர்னு ட்ரெய்ன் ஆஃப் பண்ணிட்டதால நின்னுட்டோம்.மூனுநாள் ஆகும். ட்ரெய்ன் விட்டுச்சுன்னா ஊருக்குப் போய்டுவோம்'' என்கிறார் பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணன்.

 

k

 



''இவங்களுக்குச் சம்பளம் கொடுக்கச் சொல்லி கவர்மெண்ட்ல இருந்து சொல்லியிருக்காங்க.மேஸ்திரி கணக்குக்குப் போயிடும். அவரு பிரிச்சி கொடுத்திடுவாரு.டிபார்ட்மெண்ட்ல லிஸ்ட் கேட்டிருக்காங்க. நேத்தே கொடுத்திட்டோம்.ஆளுக்கு 15 கிலோ அரிசி புரவிசன்ஸ் கவர்மெண்ட் தரப்பிலேர்ந்து கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க. நாங்க வாங்கிக் கொடுத்திடுவோம்.சாப்பாட்டுக்கெல்லாம் ஒன்னும் பிரச்சினை ஆகாது.ஓனர் போன் பண்ணிச் சொன்னாரு, நான் எல்லாத்துக்கும் மாஸ்க் வாங்கி கொடுத்திட்டேன்.'' என்கிறார் மேம்பால பணியைச் செய்துவரும் ஆர்.பி.பி. கண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தைச் சேர்ந்த சைட் அட்மின் ராஜாமுகம்மது.  
 

6


''டெய்லி அறுநூறு ரூபா சம்பளம்.வாரா வாரம் மேஸ்திரி கொடுப்பாரு.நாங்க இருநூறு முன்னூறு மட்டும் வாங்குவோம்.மிச்ச காசு மாசக் கடைசியில வாங்கி ஊருக்கு அனுப்புவோம்.கையில இருந்த காசு காலி ஆகப்போவுது.ரெண்டு மூனு ரூம் பசங்க சேர்ந்து சமைச்சி சாப்பிடுறோம்.இனி மேஸ்திரிகிட்ட காசு வாங்கித் தான் பொருள் வாங்கணும்'' என்கிறார் ஹம்ரித்.


சைட் அட்மின் சொன்னதைப்போல, வேலையின்றி முடங்கிக் கிடக்கும் நாட்களுக்கு அரசும் காண்ட்ராக்ட் நிறுவனமும் சம்பளம் வழங்க முன்வருமா? அவை இத்தொழிலாளர்களின் கைகளுக்குச் சென்று சேருமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.அரசிடமிருந்து அரிசியும் பருப்பும் வந்தால் மட்டுமே இவர்களால் எஞ்சிய நாட்களைத் தாக்குப் பிடிக்க இயலும்? 
 

செய்தி, படங்கள் : இளங்கதிர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.