அண்மையாகவே நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில்சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் நில நிர்வாக இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் ஜாகடே சென்னை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்துறைச் செயலாளர் நந்தகோபால் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணப் பிரிவு ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.