நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன் இன்று காலை அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisment

naam tamilar party's Chennai candidate was involved in the vote collection

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது வாக்காளர்களிடம், "இத்தனை வருடங்கள் திராவிட கட்சிகளையே ஆதரித்து வந்தீர்கள். ஆனால் அவர்கள் இந்த தேர்தலுக்கு வந்தால் இதோடு அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள். சாலையில் நின்று கூட மக்களை பார்க்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல எங்கள் கட்சியில் அனைத்து வேட்பாளர்களும் படித்தவர்கள், நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர்கள், மக்களோடு மக்களாக நிற்போம். மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம்.

naam tamilar party's Chennai candidate was involved in the vote collection

naam tamilar party's Chennai candidate was involved in the vote collection

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அவர்கள் காரில் செல்பவர்கள், நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம். அதனால் தான் எங்கள் கட்சியில் 50 சதவிகிதம் ஆண்களும் 50 சதவிகிதம் பெண்களும் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறோம். ஆகவே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விவசாய சின்னத்தில் அளித்து எனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்ற அவர், வெல்லப்போகிறான் விவசாயிஎன்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.