சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (29/10/2020), வியாழக்கிழமை மட்டும் காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக இரவு 09.00 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நிலையில் நாளை மட்டும் இரண்டு மணி நேரம் கூடுதலாக ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.