Advertisment

மின்கம்பி அறுந்து மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு... பொதுமக்கள் அவதி...!

சென்னையில் மெட்ரோ ரயில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை மிக வேகமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் அதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற்பகல் 3.10 மணி முதல் தற்போது மெட்ரோ ரயில் ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

Advertisment

Chennai Metro issue

இவ்வாறு 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை மட்டும் ஒருவழிப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai metro
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe