Skip to main content

உச்சநீதிமன்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காந்தி சிலையருகே மலர் வளையம்!- மூன்று வழக்கறிஞர்கள் கைது!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

chennai merina beach gandhi statue lawyers police

 

 

நீதிமன்ற அவமதிப்பு விதிகளைத் தவறாக பயன்படுத்தியதாக, உச்சநீதிமன்றத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  மெரினா- காந்தி சிலையருகே மலர் வளையம் வைக்க சென்ற மூன்று வழக்கறிஞர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நடவடிக்கை மூலம், கருத்து சுதந்திரம் புதைகுழிக்கு சென்றதாக கூறி,  காந்தி சிலை அருகே மலர் வளையம் வைத்த வழக்கறிஞர்கள் டி.சிவஞானசம்பந்தம், ஏ.பி.சூரியபிரகாசம், எம்.எல்.ரவி, ஆகியோரை  மெரினா காவல் நிலையத்தினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்