Skip to main content

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த டிடிஆர் கைது ! 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

சென்னை பெரும்பாக்கத்தை சார்ந்தவர் முல்லை செல்வராஜ். இவர் கடந்த 22- ஆம் தேதி ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் சென்றார். இந்த ரயிலில் திருச்சி கருமண்டபத்தில் சேர்ந்த தன்ராஜ் என்பவர் ரயில் டிக்கெட் பரிசோதராக டிடி பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பை கடந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தது. அப்போது டாக்டருக்குப் படிக்கும் செல்வராஜின் மகள் ரயிலில் பயணம் செய்த போது தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். ரயிலில் இருந்த பெரும்பாலான தூங்கிக் கொண்டிருந்தனர்.


 

chennai medical college student travel in Rameshwaram Express train to arrest ttr incident



 

அப்போது, அந்த இளம் பெண்ணிடம் சென்று செல்போனை பறித்து தவறாக நடக்க முயன்றிருக்கிறார் டிடி அதிகாரி தன்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மற்றும் பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து தன்ராஜை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் மன்னிப்பு கேட்ட தன்ராஜ் பின்பு அங்கி சென்றார். ரயில் காரைக்குடி சென்றவுடன், இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் செல்வராஜ் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ரயில்வே காவல் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டிடி தன்ராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.