Advertisment

மழையை பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்..! பண்டிகை கால பர்ச்சேஸ்..!  (படங்கள்)

Advertisment

தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையின் முக்கிய கடை விதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, பூஜை பொருட்கள், பூக்கள், இனிப்பு வகைகள் வாங்குவதற்கு பலரும் தேர்வு செய்கிற இடமான சென்னையின் பாரிஸ் கார்னர் பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பூக்கடை தெருவில் தரை தெரியாமல் தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு மக்கள் குவிந்தனர். மாலையில் திடிரென கொட்டிய மழையால் சாலைகளிலும் வியாபாரம் செய்யும் இடங்களிலும் மழைநீர் தேங்கியபோதும், விழாக்கால வியாபாரம் தடைபடாமல் நடக்கிறது. இருப்பினும், கூட்ட மிகுதியால் சென்னை உயர்நீதிமன்ற சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், பண்டிகை காலங்களில் காரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதை மறந்து பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியின்றியும் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

Chennai Market
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe