Skip to main content

சுத்துப் போட்ட ரவுடிகள்; தனி ஆளாய் துணிந்த பெண் காவலர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai marina woman constable kala brave action
 காவலர்  கலா

 

மெரினா கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில்  2 பைக்கில் வந்த 4 பேர் இந்த காதல் ஜோடி வந்த பைக் மீது மோதினர். இதனால் நிலைதடுமாறிய காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் காதல் ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றனர். இந்நிலையில் ரவுடி கும்பலின் அநாகரிக செயல் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இவற்றைப் பார்த்து அங்கிருந்த சிலர் ரவுடிகளைத் தட்டி கேட்காமல் அமைதி காத்தனர். இதனை ரவுடிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். இதனை கவனித்த ரவுடிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அந்த பெண் காவலர் தனி நபராக போராடி 4 பேரையும் மடக்கிப் பிடித்தார். பெண் காவலரை ரவுடிகள் 4 பேரும் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து  கொலை மிரட்டல் விடுத்து விட்டுப் பெண் காவலரின் பிடியில் இருந்து அவர்கள் வந்திருந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ரவுடிகள்  தப்பிச் சென்ற பைக் பதிவு எண்களுடன் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய ஆறுதல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இந்த ரவுடிகள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார்  4 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  தனி ஒருவராக  போராடி  இளம் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பெண் காவலர் கலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது