மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைப்பது தொடர்பான விண்ணப்பம் குறித்து, 6 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும் பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஆஜரான அதன் உறுப்பினர் செயலர், டாக்டர்.ஜெயந்தி, கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பான சென்னை மாநகராட்சியின் விண்ணப்பம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், மெரினாவில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காகத் தள்ளுவண்டி கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் மற்றும் கடைகள் வாடகை நிர்ணயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனக் கோரினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மெரினாவை உலகத்தர கடற்கரையாக மாற்றுவதே தங்கள் நோக்கம் எனவும், எந்த வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும்தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை மீது 6 வார காலத்திற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். அதுபோல, மீன் பிடி தடைக் காலத்தின்போது கொடுக்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்கக் கோரிய பிரதான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.