ஆறு மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்டவிருப்பதாகவும், பின்னர் அங்குள்ள மீன் கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு மீன் சந்தைக்கு மாற்றப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து,‘மெரினா கடற்கரை வணிகத்தளம் அல்ல; மெரினா கடற்கரை மக்களுக்கானது. அடுத்த 6 மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படும். அதுபோல, கடற்கரை சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும். லூப் சாலையில் மீன் சந்தை கட்டும் போது அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும்.’என்று அறிவுறுத்திய நீதிபதிகள்‘தேவைப்பட்டால் விதி மீறுபவர்களைக் கட்டாயப்படுத்தி அகற்றலாம். கடற்கரையில் உள்ள உணவுக் கடைகள் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் அவற்றை அகற்ற வேண்டும்.’என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும், கடற்கரை கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் டிசம்பர் 13- ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 16- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.