Advertisment

சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

சென்னை மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Advertisment

chennai marina beach bjp leaders arrested police

நெல்லை கண்ணன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நெல்லைக் கண்ணனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லைக் கண்ணன் மீது நெல்லை காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது 504, 505(1), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

bjp

Advertisment

இந்த நிலையில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

bjp

இதனிடையே சென்னை மயிலாப்பூரில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

arrested BJP LEADERS Marina Chennai Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe