chennai maduravoyal incident

காற்றாடியைப் பிடிக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை மதுரவாயலில் கிஷோர் என்ற 11 வயது சிறுவன் உயர் அழுத்த மின் கம்பியில்சிக்கிய காற்றாடியை எடுக்கச் சென்ற நிலையில் சிறுவன் கிஷோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காற்றாடியை மீட்க சென்ற 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் மாஞ்சா காற்றாடிகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், அதற்குத்தடைவிதிக்கப்பட்டதோடுமாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை மறைத்து விற்பவர்களைக் கண்டுபிடிக்கத்தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, பலர் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.