Advertisment

மாதாவரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட பூ, பழக்கடை மார்க்கெட் (படங்கள்)

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை கோயம்பேட்டில் மக்கள் அதிகம் கூடக்கூடாது என்பதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து மாதவரம் பேருந்து நிலையத்திற்கு பூ மற்றும் பழக்கடை மார்க்கெட் மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் யாரும் கடைகள் போடாததால் மாதாவரம் பூ மற்றும் பழக்கடை மார்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. ஓரிரு வாழைத்தார் கடைகள் மட்டும் இருந்தன. கடைகளை மாற்ற உத்தரவு பிறப்பித்த அதிகாரிகளிடம் மாதவரத்தில் நாங்கள் கடை நடத்த மாட்டோம் என்று சில்லறை வியாபாரிகள் சிலர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Market fruits flowers madhavaram Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe