நில அபகரிப்பு வழக்கில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் டிசம்பர் 12- ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போது, கிண்டியில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்துவிட்டதாக அவர் மீதும், மனைவி காஞ்சனா மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருவரும் இன்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி ராஜ்குமார் முன்பு, மா.சுப்பிரமணியம், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் ஆஜரான நிலையில், மீண்டும் வரும் டிசம்பர் 12- ஆம் தேதி இருவரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.