வெறிச்சோடிய சாலைகள்! வெளியே வந்தால் அபராதம்!! (படங்கள்)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று (19.06.2020) முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த ஊரடங்கைக் கடுமையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் திருமங்கலம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அனுமதி இன்றி வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

Chennai lockdown Vadapalani
இதையும் படியுங்கள்
Subscribe