Skip to main content

அடையாள அட்டையை காண்பித்தாலும் அனுமதிக்கவில்லை... பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு...

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
lockdown chennai

                                                                                                                                         படம் மாடலே


கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 

 

பணிக்கு செல்லும் 33 சதவீத மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரிடம் காண்பித்து அலுவலகத்திற்கு செல்கின்றனர். 

 

இந்த நிலையில் ஊரடங்கின் முதல் நாளான இன்று அரசு அலுவலங்களில் ஊழியர்கள் சிலர் வரவில்லை. இதுபற்றி அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கூறும்போது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை போலீசார் விட்டுவிடுகின்றனர். அதேபோல் நகரத்திற்குள் இருந்து வரும் ஊழியர்களையும் விட்டுவிடுகிறார்கள். மாவட்ட எல்லையில் இருந்து வரும் ஊழியர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அடையாள அட்டை இருந்தும் அவர்களை அனுமதிக்கவில்லை என்கின்றனர்.

 

பத்திரப் பதிவு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், கரோனா தொற்று இருப்பதால் அரசு விதித்த கட்டுப்பாடுகள் படி குறைந்த ஊழியர்களை வைத்துதான் இந்த அலுவலகம் இயங்குகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் என்னென்ன நடைமுறைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு நடைமுறையையும் ஒவ்வொரு ஊழியர் செய்வார். அவர்களில் ஒருவர் வரவில்லை என்றால், உயர் அதிகாரிகள் முதல் அனைத்து ஊழியர்கள் வந்திருந்தாலும் வீண்தான். இதேபோல் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நேரமும் வீணடிக்கப்படும். 

 

எங்களது அலுவலகத்தை பொறுத்தவரை துறை சார்ந்த அடையாள அட்டை உள்ளது. அதை காண்பித்தாலே போலீசார் விட்டுவிடுவார்கள் என்று எங்களது உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கள் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களை இன்று அந்த அடையாள அட்டையை காண்பித்தும் அனுமதிக்கவில்லை. பெண் ஊழியர்கள் தங்களை அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.  வெயிலில் அவர்களை நிற்க வைப்பது வேதனையாக இருக்கிறது.

 

இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அடையாள அட்டையை காண்பித்தால் விட்டுவிடுங்கள் என போலீசாருக்கு நாங்கள் சொல்லியுள்ளோம் என்கிறார்கள். ஆனால் அதைக் காண்பித்தாலும் அனுமதிக்கவில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இ-பாஸ் இருந்தால் போதும் விட்டுவிடுவார்கள். அதனை உங்கள் டிபார்ட்மெண்ட்டில் வாங்கவில்லையா? என்கிறார்கள். மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை தொடர்புகொண்டால், மாஸ்க் இருந்தால் விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஒவ்வொருவரும் மாறி மாறி இப்படி பதில் சொன்னால் என்ன செய்வது. 

 

அரசு அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டை அல்லது வேறு என்ன ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெளிவாக அரசு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் தெரிவித்துவிட்டால் இந்த பிரச்சனையில்லை. கரோனா காலத்தில் வேலைக்கு ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தப்படி வந்து செல்கிறோம். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட பிரச்சனை வராமல் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்