இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து அரசு பேருந்துகளையும், தனியார் பேருந்துகளையும் தினமும் சுத்தம் செய்யச் சொல்லி இருக்கோம். பணிமனையில் பஸ்சை எடுக்கும்போது மாஸ்க் (முகக் கவசம்) வழங்கச் சொல்லியிருக்கோம். பேருந்து நிலையங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கை கழுவ சானிடைசர் வைக்கச் சொல்லியிருக்கோம்" என்றார்.
அதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கையை நனைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதையே அத்தனை ஓட்டுநர், நடத்துநர்களும் கடைப்பிடிக்கின்றனர். தலைநகர் கோயம்பேடு நிலையத்திலேயே இப்படின்னா? மற்ற பேருந்து நிலையங்களில் சொல்லவா வேண்டும்.?