Advertisment

நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட் திறப்பு... படங்கள் 

கரோனா ஊரடங்கு காரணமாகச் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த மளிகை வியாபார கடைகள் கடந்த ஏப்ரல் 27 -ஆம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டபோது வணிகர்கள், கோயம்பேடு மார்கெட்டையும் திறக்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு மார்க்கெட்டை நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் செப்டம்பர் 18 -ஆம் தேதிமுதல் கோயம்பேடு மளிகை வியாபார மார்கெட்டை முதலில் திறப்பதற்கு அனுமதி அளித்தார். இந்த அனுமதியைத் தொடர்ந்து கடைகளுக்கு வெள்ளை அடிப்பது, பழுதுபார்ப்பது என மார்க்கெட்டை சுத்தப்படுத்தும் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

Market koyambedu COIMBEDU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe