கரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று (27/09/2020) நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 5- ஆம் தேதி மூடப்பட்ட நிலையில் சுமார் ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு கோயம்பேடு சந்தை திறக்கப்படுகிறது. காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்களின் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமி நாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 09.00 மணி முதல் காலை 05.00 மணி வரை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.