வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகர் பகுதி, நீலமேகம் தெருவில் மழை குறைந்தும் நீர் வடியாததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர்.