Skip to main content

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Chennai Kindi Children's Park closed!

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.  நேற்று வண்டலூர் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பூங்காவை ஜனவரி 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா  (ஜன.17)  நாளை முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ள வன உயிரின காப்பாளர், நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப பூங்காவை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் தகராறு; கலவரக் காடான பார்க் 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Reels videotaping dispute; Womens fight in park

 

அண்மைக் காலமாகவே 'மாஸ், ரொமான்ஸ்,காமெடி என்ற பெயரில் இளைஞர்கள், பெண்கள் சிறுவர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. சில நேரங்களில் ஆபத்தான முறைகளில் வாகனங்களில் செல்லும் போதும், நீர் நிலைகளின் அருகிலும் விபரீதம் அறியாமல் ரீல்ஸ் எடுக்க முயன்று உயிரிழப்பு வரை ஏற்படுகின்ற சம்பவங்களும் அதிகம். இந்நிலையில் பார்க்கில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட பெண்களால் கலவரமே வெடித்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் புதிதாக நேற்று பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அந்த பூங்காவில் அதிகப்படியான கூட்டம் கூடியது. அப்பொழுது அந்த பகுதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரண்டு தரப்பு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது. இதில் ஒருவரை ஒருவர் குடுமியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பால் சற்று பதற்றம் நிலவியது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

“இளைஞர்கள் அவர்களது நிஜ வாழ்க்கையில் ஸ்மார்ட்டாக இருப்பதில்லை” - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Governor of Tamil Nadu RN Ravi says Youths are not smart in their real life

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் அரங்கில் ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று (14-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இளம் சாதனையாளர்களிடம் கலந்துரையாடினார்.

 

அதில் பேசிய அவர், ”10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது இந்தியா பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் சீனாவில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டும் வென்றிருந்தது. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் ஏராளமான தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை இந்தியா வாரிக் குவித்து சாதனை படைத்து வருகிறது. 

 

2047 ஆம் ஆண்டில் உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். அதை இன்றைய சாதனையாளர்களாகிய நீங்கள்தான் சாத்தியப்படுத்தப் போகிறீர்கள். இன்றைய மாணவர்கள் தங்களது நேரத்தைச் சரியான முறையில் கையாள வேண்டும். செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். செல்போனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது. செல்போன் மட்டுமல்ல கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் ஆகியவற்றிலும் தேவையான நேரத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் டிஜிட்டல் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களது நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஸ்மார்ட்டாக இருப்பதில்லை. 

 

மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். தற்போதைய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு மனிதர்களை ஆள முடியாது. அது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதனால், அது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனாலும், அணு ஆயுதத்தை போல் செயற்கை நுண்ணறிவும் மிகவும் ஆபத்தானது தான். அதைக் கட்டுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு” என்று கூறினார்.