Skip to main content

காப்பான் பட விழாவில் ரஜினியின் பேச்சு! உன்னிப்பாக கவனிக்கும் திமுக!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சில் அரசியல் ரீதியான கருத்துக்கள் எதிரொலித்தன.  பாஜக அரசின் புதிய தேசிய கொள்கைக்கு எதிராக சமீபத்தில் வாள் சுழற்றியிருந்தார் நடிகர் சூர்யா. இது பல்வேறு தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், 'புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினி பேசியிருந்தால் உடனே பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும்' என்றனர். இதனை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய ரஜினி, ‘’நான் பேசினால் மோடிக்கு எட்டியிருக்கும் என்கிறார்கள். ஆனால், சூரியா பேசியதும் எட்டியிருக்கும்‘’என சூர்யாவிற்கான ஒரு முக்கியத்துவத்தை தந்த அவர், தனது பேச்சு மோடிக்கு உடனடியாக தெரிய வரும் என்பதை மறுக்கவில்லை. ரஜினியாகிய நான் எதைப் பேசினாலும் அது உடனடியாக மோடிக்கு தெரியப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது அவரதுப் பேச்சு !  

 

chennai kaappaan film audio launch actor rajini kandh speech

 

 

மேலும், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட வைரமுத்துவின் தமிழராற்றுபடையின் நூல் வெளியீட்டு விழாவில், தமிழினம் எப்படி இருக்க வேண்டும்? அந்த இனம் எப்படி செயல்பட வேண்டும்? என ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை காப்பான் பட விழாவில் மேற்கோள்காட்டினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சும் அரசியல் ரீதியாக உற்றுப்பார்க்கப்படுகிறது. தமிழராற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில்  மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டாமல் ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டி ரஜினி பேசியிருப்பதை திமுக, காங்கிரஸ் தரப்பில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.குறிப்பாக, வைரமுத்துவின் நூல் வெளியிட்டு விழாவை பாராட்ட ரஜினி நினைத்திருந்தால் வைரமுத்துவையும் அவரது நூலில் உள்ள கருத்துக்களையும் மட்டும் அவர் பாராட்டியதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எதற்காக வியந்து பாராட்ட வேண்டும்? என அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் இதனை சிலர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் சொல்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.