பிரதமர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமிழகம் வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 30- ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ஐஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்திற்கு முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பழைய விமான நிலையம் தமிழக போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.