Advertisment

ஐ. ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம்!  சிறப்பு விசாரணைக் குழு விசாரணை தேவை! - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்  

Chennai IIT Employee passes away inside campus

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஐ.டி.நிர்வாகத்தை கண்டித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, "சென்னை ஐ.ஐ.டி. உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தச் சூழ்நிலையில் சென்னை ஐஐடி கல்வி வளாகத்தில் உன்னிகிருஷ்ணன் எனும் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது. எனவேதான், பணியில் இருந்து வெளியேறுவதாக அங்கு பணிபுரிந்த உதவி பேராசிரியர் விபின் கடிதம் கொடுத்து இருக்கிறார் என்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர் ஒருவரின் மரணம் நிகழ்ந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஏற்கெனவே கடந்த 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் பாரபட்சப்போக்கை சுட்டி காட்டிய நிலையில் மர்மமாக மரணித்தார். இது குறித்த சிபிஐ விசாரணையும் மர்மமாகவே உள்ளது.

நல்ல கல்வி என்பது மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சம உரிமை குறித்த புரிதலை உருவாக்குவது ஆகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனத்தில் இது போன்ற சமூகக் கேடுகளை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சமூக ரீதியான பாகுபாடுகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும்" என்று வலியிறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

CHENNAI IIT M. H. Jawahirullah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe