இலவச வீட்டுமனை பெறுபவர்களுக்கு நிலம் இருப்பது தெரியவந்தால் பட்டாவை ரத்து செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை வீடு கட்டியிருந்தால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரி சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது பற்றி பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.