சட்டவிரோத மணல் கடத்தலால்,நிலத்தடி நீர் குறைவதோடு சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைவதாக கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் இனி மணல்கடத்தல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாதுஎன்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமின்பெற முறையீடு செய்த40 பேரின்மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மணல் கடத்தல் தொடர்பாகபல உத்தரவுகள் பிறப்பித்தாலும்மணல் கடத்தலில் சிக்கி முன்ஜாமீன் பெறுவோர்களின் எண்ணிக்கை என்பது குறையாமல்அதிகரித்தே வருகிறது. கரோனா காலத்தில் அனைத்துமேமுடங்கினாலும் மணல் கடத்தல் மட்டும் முடங்கவில்லை. எளிமையாக முன்ஜாமீன் கிடைத்துவிடும் எனபதாலே தவறு செய்கின்றனர். எனவே, இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது எனநீதிமன்றம் தெரிவித்துள்ளது.