Skip to main content

‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட இடைக்காலத்தடை!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

CHENNAI HIGHCOURT

 

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவ காணோம்’ என்ற படத்தை இணையத்தளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால், நேரடியாக ஓ.டி.டி தளங்களில் படங்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.  

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. வேல்மதி இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த நிலையில்,  ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓ.டி.டி தளத்தில், ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அவுட்டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘படத் தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்தோம். அதுபோல், தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்தோம். ஆனால், வாடகை மற்றும் கடன் தொகையை அவர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை. எனவே, படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். எனக்கு அளிக்க வேண்டிய கடன் பாக்கியை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பி.எல்.நாராயணன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அண்டாவ காணோம் படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.