50% பணியாளர்களுடன் உயர்நீதிமன்றம் செயல்படும்!

chennai high court working with 50% employees

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் இன்று (10/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அனைத்து பிரிவுகளும் 50% பணியாளர்களுடன் செயல்படும். பணியாளர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் என சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai high court Registrar
இதையும் படியுங்கள்
Subscribe