Published on 30/06/2020 | Edited on 30/06/2020
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக, மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் ஆர். சங்கர்நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளையில், மத்திய அரசு சார்பில் ஆஜராக, மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்து வந்தார். அந்தப் பதவிக்கு தற்போது, புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கர்நாராயணனை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தப் பதவியில், இவர் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.