Advertisment

'போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம்!' - உயர்நீதிமன்றம் கருத்து!

chennai high court pocso act correction needed judge

Advertisment

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம் என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மைனர் பெண்ணைக் கடத்திதிருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திரன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து,பெண்ணுக்குத் திருமணம் செய்ய வழக்குத் தடையாக இருப்பதாகக் கூறி தாயும், மைனர் பெண்ணும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (29/01/2021) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம். காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர் என்று கூறி அந்தப் பெண்ணின்திருமணம் பாதிக்கப்படுவதால் இந்திரன் மீதான வழக்கை ரத்துசெய்வதாகஉத்தரவிட்டார்.

POCSO ACT chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe