Skip to main content

அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நீட்டிப்பு!- உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! 

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உள்பட, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நீதிமன்றங்கள்!

CHENNAI HIGH COURT ORDERS EXTEND JUDGES

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸினால், இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடந்த 23- ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதனால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளன.

அவசியம் என்று கருதப்படும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்றங்கள் எதுவும் செயல்படாததால், நீதிமன்றங்களில் பெறப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் பெரும் பாதிப்பு!

உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவை பல வழக்குகளை விசாரித்து இடைக்காலத்தடை உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கும். அந்த இடைக்காலத்தடை உத்தரவுகள் எல்லாம் மார்ச் 20- ஆம் தேதி, அல்லது அதன் பின்னர் காலாவதியாகக்கூடும். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 

இதனால், நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் செயல்படவில்லை. வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது. நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, வீடுகளைக் காலி செய்வது உள்ளிட்டவைகளுக்காக ஏற்கனவே பெறப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுகளை எல்லாம் நீட்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றங்களிடம் பெறப்பட்ட இதுபோன்ற இடைக்கால நிவாரண உத்தரவுகளின் பலன்களைப் பொதுமக்கள் அனுபவிப்பதற்கு இடையூறு எதுவும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.
 

நீட்டிப்பும், நிறுத்திவைப்பும்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால், நீதிபரிபாலன நடைமுறையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 226, 227 ஆகியவற்றுடன் இணைந்த குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவுகள் 482, 483 ஆகியவற்றை பயன்படுத்தி, சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம். உயர்நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம். 

சொத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றவும், அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை இடிக்கவும் உயர்நீதிமன்றம், மாவட்ட செசன்சு நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 
 

ஜாமீன், முன்ஜாமீன், பரோலுக்கும் இது பொருந்தும்!

அதுபோல, குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனைகளுடன் பெறப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் ஆகியவை, மார்ச் 20- ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருந்தால், அவற்றை எல்லாம் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.

இந்த உத்தரவுகள் அனைத்தும், இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்து இருந்தால், அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும். இவ்வாறு இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிப்பதால், அரசுக்கோ, தனி நபருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.