Skip to main content

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

 

hh

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை  தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையை சேர்ந்த புகழேந்தி என்பவர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வாகம் செய்ய நிர்வாகிகளை நியமனம் செய்யவேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்