வெடிகுண்டு மிரட்டல்- வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு காவல்துறை கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

chennai high court lawyers instruction police circular issued

அந்த சுற்றறிக்கையில் உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று காவல்துறை கூடுதல் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

chennai high court instruction lawyers police
இதையும் படியுங்கள்
Subscribe