Skip to main content

சான்றிதழ்களை கிருபாமோகன் பல்கலைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம் உத்தரவு.

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பெளத்தம் படித்துக் கொண்டிருந்த மாணவர் கிருபா மோகன் கல்லூரியிலிருந்து 06.09.2019 தேதியிட்டு  Not approved for his provisional admission என்று தெரிவிக்கப்பட்டு திடீரென நீக்கப்பட்டார்.  மாணவர் கிருபாமோகன் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படித்து முடித்தவர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திலும் செயல்பட்டு வந்தவர்.
 

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தனக்குக் கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் மாணவர் கிருபாமோகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இன்று (17.109.2019) இவ்வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மாணவருக்காக ஆஜராகி வாதாடினார். அவருடன் வழக்கறிஞர்கள் சு.ஜிம் ராஜ் மில்ட்டன், ச.பார்த்தசாரதி, மீனாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். 

CHENNAI HIGH COURT KIRUPA MOHAN MADRAS UNIVERSITY HIGH COURT ORDER




சென்னைப் பல்கலைக்கழத்தின் உத்தரவில்-

1. ஏற்கனவே  முதுநிலை படித்தவராக இருந்தால், அவர் எந்தப் பாடத்திலும் தோல்வியடைந்திருக்கக் கூடாது.

2. கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியிருக்க கூடாது.

3. ஏற்கனவே  படித்திருந்த துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, இந்த மூன்று விதிகளில் எந்த விதியை மீறியிருக்கிறார் என கல்லூரியின் நீக்க உத்தரவில் கூறப்படவில்லை என்றும், இவ்வாறு எவ்வித காரணமும் தெரிவிக்காமல் மாணவருக்குக் கல்வி மறுத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, உள்நோக்கமுடையது என்றும் வாதிட்டார்.
 

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பாக ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயணன் அவர்கள், மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழக விதிகளின்படிதான் நீக்கியுள்ளதாக வாதாடினார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாணவர் கொடுக்க வேண்டிய ஆவணங்களான இளங்கலை பட்டத்திற்கான தகுதிச்சான்றும் (Eligibility certificate) பரிந்துரைக் கடிதமும் சென்னைப் பல்கலைக்கழகம் கொடுக்க வேண்டியிருப்பதால் மாணவர் கிருபாமோகன் மேற்சொன்ன சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகத்திடமே விண்ணப்பித்து, அந்த ஆவணங்களைப் பெற்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. 3 வார காலத்திற்குள் மேற்சொன்ன பணிகளை நிறைவு செய்யவும், 3 வார நிறைவில் மீண்டும் வழக்கைப் பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.