chennai high court judge opinion for tnpsc exam, tn govt

Advertisment

பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு அரசு பணி வழங்கியது பற்றிய தகவலை வெளியிட மறுத்த வழக்கில், கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், 'கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும். சான்றிதழில் சாதிப்பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர். தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது. அச்சம் உண்மை என்றால் டி.என்.பி.எஸ்.சி.யும், தமிழக அரசும் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.