Skip to main content

சென்னை உயர்நீதிமன்றம் 7- ஆம் தேதி முதல் செயல்படும்! -நிர்வாகக்குழு கூட்டத்தின் அறிவிப்பால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020

 

chennai high court again regular working sep 7th

சென்னை உயர்நீதிமன்றம் வருகிற செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செயல்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு கூட்டம் அறிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தை திறக்கக்கோரி, பல்வேறு சங்கத் தலைவர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்தக் கோரிக்கையை எல்லாம் பரிசீலிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது  இந்தக் குழு கூடி செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.

 

தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உட்பட 6 டிவிஷன் பெஞ்சுகளும், உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செயல்படலாம். இதில் வழக்கறிஞர்கள் நேரடியாக வாதாட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு, படிப்படியாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று இந்தக் குழு அறிவித்துள்ளது.  இது வழக்கறிஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வருக்கு விடுமுறை கோரிய வழக்கு; வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதித்து, பொதுநல வழக்கு தொடர தடை விதித்த நீதிமன்றம்!! 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021
the court imposed a fine and barred him from pursuing a welfare case

 

அசாதாரண சூழ்நிலைகள் தவிர, தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக் கூடாது என, அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவத் துவங்கிய நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருவதாகக் கூறி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

அவர் தனது மனுவில், முதல்வரின் உடல் நலனில் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வது என ஓய்வு இல்லாமல் உழைத்து வருவதாகவும், ஓய்வு இல்லாமல் பணியாற்றிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயக்கமடைந்து, மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் ஓய்வு எடுப்பது அவசியம் எனக் கூறியுள்ள மனுதாரர், அசாதாரண சூழ்நிலைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வருக்கு எந்த கோப்பையும் அனுப்புவது, அவரின் உத்தரவு கேட்பது என தொந்தரவு செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, முதல்வர், அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அபத்தமான காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறி, மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் கரோனா நிவாரணத்துக்காக வழங்க வேண்டும் எனவும், மனுதாரர் ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தொடர தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

 

 


 

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.