Advertisment

சீன அதிபர், மோடி வருகை - வாகனங்களை இயக்கி ஒத்திகை

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் இரு நாட்கள் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நாளை சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்லும் மோடி, அங்கு கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

Advertisment

இதனிடையே சீனாவில் இருந்து தனி விமானத்தில் வரும் அந்நாட்டு அதிபர் ஜின் பிங், நாளை சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இதையொட்டி, விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஓட்டல் வரை இன்று வாகனங்களை இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

Advertisment

police guindy Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe