சென்னையில் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட தற்போது 25% விலை உயர்ந்துள்ளது. அதன்படி வஞ்சிரம் கிலோ ரூபாய் 800, கருப்பு வவ்வால் ரூபாய் 600, நண்டு ரூபாய் 350, நெத்திலி ரூபாய் 250, சீலா ரூபாய் 400, மத்தி ரூபாய் 85, ஊசி கணவாய் ரூபாய் 210, கேரை ரூபாய் 250, சங்கரா ரூபாய் 400 வரை விற்கப்படுகிறது. கரோனா மற்றும் ரசாயனம் கலந்த சந்தேகத்தால் கடந்த வாரம் மீன்களின் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் கோழி இறைச்சி விலை இரண்டாவது வாரமாக மிகவும் சரிந்து ரூபாய் 110க்கு விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி (உயிருடன்) ரூபாய் 340 க்கு விற்கப்படுகிறது.