Advertisment

தப்பியது சென்னை; 10 மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை

nn

Advertisment

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணி வரை மின்வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆவடி அடுத்த காந்தி நகர், பட்டாபிராம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநீர்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த பிறகு மின் விநியோகம் சீர் செய்யப்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. கனமழை காரணமாக பொதுமக்கள் 1077, 0422-2306051-ல் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் அதிகனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சென்னையில் இரவு 10:00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe