சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (25.04.2023) காலை 10 மணியளவில் சென்னை ஈ.பி.எப். (E.P.F) பென்ஷனர்கள் சங்கம் சார்பில் மணியோசை எழுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிடம்குறைந்தபட்ச பென்ஷனாக9 ஆயிரம் ரூபாயை பஞ்சப்படியுடன் வழங்கக்கோரியும்மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த ரயில்வேபயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரியும் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.