Skip to main content

சென்னை குடிநீர் பைப் லைன் தில்லுமுல்லு!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019


சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை என  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூலாக சொல்லி வருவது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

இந்த நிலையில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான பைப்  லைனில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் பைப் லைன் கொடுத்துள்ளது சென்னை மெட்ரோ நிறுவனம். 

Chennai Drinking Water Pipeline cheating


அதாவது, சென்னையின் முக்கியப் பகுதிகளில் குடிநீர் ஃபில்லிங் பாயிண்டுகள் இருக்கின்றன. இந்த ஃபில்லிங் பாயிண்டுகளில் இருந்து ஒரு மெயின் பைப் லைன் வீதிகளுக்குச் செல்லும். அந்த பைப் லைனிலிருந்து வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுக்கப்படும். ஃபில்லிங் பாயிண்டிகளில் தண்ணீர் திறந்து விடும்போது அனைத்து வீடுகளுக்கும் சரிசமமாக தண்ணீர் போய்ச்சேரும். ஆனால், அதிகாரிகளின் துணையுடன் சில தில்லுமுல்லுகள் நடந்துள்ளன என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கிறது. 

 

Chennai Drinking Water Pipeline cheating


இது குறித்து நம்மிடம் பேசிய  மெட்ரோ பணியாளர்கள், " ஃபில்லிங் பாயிண்டுகளிலிருந்து மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்காக மட்டும் தான் பைப் லைன் போடப்பட்ட வேண்டும். ஆனால், தற்போது சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பிரபல வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், சில வி.வி.ஐ.பி.யின் வீடுகள் ஆகியவற்றிற்கு ஃபில்லிங் பாயின்டுகளிலிருந்து தனி பைப் லைன் அமைத்து நேரடியாக இணைப்புத் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130 இணைப்புகள் இப்படி தரப்பட்டுள்ளன.  ஃபில்லிங் பாயிண்டுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் இந்த தனி பைப் லைன் களில் தண்ணீர் செம வேகத்தில் கொட்டும். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் பைப் லைனில் அழுத்தம் குறைவாக ஏற்படுவதால் தண்ணீரின் வேகம் குறைந்து வீடுகளுக்கு முறையாக தண்ணீர் போய்ச்சேர்வதில்லை. தற்போது குடிநீர் பஞ்சம் அதிகரித்திருப்பதால் ஃபில்லிங் பாயிண்டுகளிலிருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. எப்போதாவதுதான் திறந்து விடுகிறார்கள். அதே சமயம் குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், வி.வி.ஐ.பி.களுக்கு மட்டும் தடையின்றி தண்ணீர் பாய்கிறது. பல வருடங்களாக இந்த தில்லுமுல்லுகள் நடந்து வருகின்றன " என சுட்டிக்காட்டுகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.