"கஞ்சா கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம்" - தி.நகர் காவல் துணை ஆணையர் பேட்டி!

chennai district t nagar Deputy Commissioner of Police press meet

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கஞ்சா கும்பல் தலைவன் இன்று (25/08/2020) காலை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தியாகராய நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், "சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம். கைதாகியுள்ள 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்களின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்து அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். கல்லூரிகளுடன் தொடர்ந்து காவல்துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களை மூளைசலவை செய்தும் கல்லூரியை விட்டு வெளியேறும் மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனைக்கும்பல் செயல்பட்டுள்ளது" என்றார்.

Chennai deputy commissioner of police PRESS MEET t.nagar
இதையும் படியுங்கள்
Subscribe