சென்னையில் 15 மண்டலங்களில் திருவொற்றியூர் உள்பட 9 மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது.
சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை இன்று (12/06/2020) வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,584 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,966, திரு.வி.க.நகர் 2,550, திருவொற்றியூர் 1,024, மாதவரம் 747, தண்டையார்பேட்டை 3,584, அம்பத்தூர் 949, தேனாம்பேட்டை 3,291, வளசரவாக்கம் 1,217, அண்ணாநகர் 2,571, அடையாறு 1,534, பெருங்குடி 515, சோழிங்கநல்லூரில் 493, ஆலந்தூர் 555, மணலி 405, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 413 பேர் என மொத்தம் 27,398 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.