Skip to main content

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 210 பேருக்கு கரோனா!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

chennai corporation coronavirus list


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,258 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 210 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராயபுரத்தில்- 199, கோடம்பாக்கம்- 97, அண்ணா நகர்- 86, தண்டையார்பேட்டை- 77, தேனாம்பேட்டை- 105, பெருங்குடி- 9, அடையாறு- 20, திருவொற்றியூர்- 16, வளசரவாக்கம்- 40, ஆலந்தூர்- 9, சோழிங்கநல்லூர்- 3, மாதவரம்- 4, மணலி- 2, அம்பத்தூர்- 27, மற்ற பகுதிகளுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 2 பேர் என மொத்தம் 906 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

 

chennai corporation coronavirus list


நேற்றைய தினம் மட்டும் தேனாம்பேட்டையில்- 20,  ராயபுரத்தில்- 10, கோடம்பாக்கத்தில்- 34, திரு.வி.க.நகரில்- 41, அண்ணா நகரில்- 13, அம்பத்தூரில்- 7, வளசரவாக்கத்தில்- 10, சோழிங்கநல்லூரில்- 1, மணலியில்- 1, அடையாறு- 1 பேர் என 138 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp


இதில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற 673 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்