chennai corporation commissioner press meet

சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

Advertisment

அப்போது அவர் பேசியது பின்வருமாறு,"சென்னையில் 90% பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்; ஆனால் இதுமட்டும் போதாது; அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம். சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூபாய் 400 கோடி செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பரிசோதனைக்கு ரூபாய் 200 கோடி செலவிடப்பட்டுள்ளது. களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூபாய் 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பேசினார்.

Advertisment