ADVERTISEMENT

அடையாறு மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்வு!

12:52 PM Jun 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நேற்று (03/06/2020) இரவு 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,316 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்தனர். மற்ற 11,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

ADVERTISEMENT


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,029, திரு.வி.க.நகர் 1,798, திருவொற்றியூர் 610, மாதவரம் 431, தண்டையார்பேட்டை 2,093, அம்பத்தூர் 651, தேனாம்பேட்டை 2,014, வளசரவாக்கம் 939, அண்ணாநகர் 1,525, அடையாறு 1,007, பெருங்குடி 301, சோழிங்கநல்லூரில் 306, ஆலந்தூர் 261, மணலி 246, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 163 பேர் என மொத்தம் 17,598 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8,900 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 139 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 8,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT